தபால் துறைக்கு 700 கோடி ரூபா நட்டம்..!!

tubetamil
0 minute read
0

 தபால் திணைக்களத்திற்கு கடந்த வருடம் 7 பில்லியன் ரூபா (700 கோடி ரூபா) நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று (17) தெரிவித்தார்.


இந்நிலையில் தபால் துறையை விற்பனை செய்யும் எண்ணம் இல்லை என்றும், அதனை இலாபகரமான நிறுவனமாக மாற்றும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கூறினார்.


தபால்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான பொது மற்றும் தனியார் கூட்டுத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மேலும் தெரிவித்தார்.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top