யாழ்ப்பாணம் குருநகர் புனித ஜேம்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற ஆலய திருவிழாவில் பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கைக்கான பிரதிநிதி வணக்த்துக்குரிய கலாநிதி பிறாயன் ஊட்க்கே பங்கேற்றுள்ளார்.
குறித்த நிகழ்வு இன்று (25.07.2023) இடம்பெற்றுள்ளது.
மேலும், இவ்விழாவில் வடமாகாண ஆளுநர்பி.எஸ்.எம்.சார்ஸ் கலந்துகொண்டுள்ளார்.
இணைந்து பணியாற்றுவதற்கான ஓர் அடையாளம்
இந் நிகழ்வில் வணக்த்துக்குரிய கலாநிதி பிறாயன் ஊட்க்கே ஆற்றிய சிறப்புரையில் , வடமாகாண ஆளுநரை விழித்து தான் வருகை தந்த சந்தர்ப்பத்திலே அவர் இகே கலந்துகொண்டிருப்பது கத்தோலிக்க திருச்சபையும் அரசாங்கமும் இணைந்து பணியாற்றுவதற்கான ஓர் அடையாளமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தான் வடமாகாணம் பற்றியும் இந்த மக்கள் பற்றியும் நன்கு அறிந்திருப்பதாக கூறிய பாப்பரசரின் பிரதிநிதி இந்த மக்களின் அன்பு மிகவும் பெரியதாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.