ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மூத்த பேராசிரியர் பத்மலால் எம். மானே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் மூன்று வருட காலத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நியமனத்திற்கு முன்னர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதியாக இவர் பணியாற்றி இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.