கெரோயின் போதைப் பொருளுடன் ஆண் உட்பட பெண்கள் கைது
மானிப்பாய் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 15கிராம் கெரோயின் போதை பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட ஒரு ஆணும் மானிப்பாய் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆனைக்கோட்டை மற்றும் உடுவில் மல்வம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வருகின்றது. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என மானிப்பாய் பொலீசார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.