களுத்துறை காட்டுப்பகுதியில் பல மாணவிகள் பாலியல் வன்புணர்வு! ஆசிரியருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!!

tubetamil
0

 களுத்துறையில்16 பாடசாலை மாணவிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் தலா இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமலி ஹல்பண்தெனிய உத்தரவிட்டுள்ளார்.

களுத்துறை வடக்கு சுபாசாதக மாவத்தையைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியரொருவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிணை நிபந்தனைகளுக்கு மேலதிகமாக, சந்தேகநபர் வெளிநாடு செல்வதை தடை செய்து குடிவரவு குடியகழ்வுக்கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பித்த நீதவான் மேலும், சந்தேகநபரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் 12 மணிக்குள் களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top