குளியாப்பிட்டி, நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் விஷம் கலந்திருந்த நீரை அருந்தியதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
அவர்களது தண்ணீர் போத்தல்களில் யாரோ ஒருவித விஷத்தை கலந்துள்ளதாக நாரம்மல காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.