அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் வசித்து வரும் பெண் தனது 7 வாரக் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காகப் பால் கொடுக்கும் பாட்டிலில், பாலிற்குப் பதில் மதுவை நிரப்பிக் குடிக்க வைத்துள்ளார்.
இதையடுத்து, அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் கார் ஓட்டிச் சென்ற தாயை ரோந்து பணியிலிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
பின்னர் அங்குள்ள காவல்துறையினர் அந்த காரை நிறுத்தி விசாரித்தபோது, குழந்தை மயக்கத்திலிருந்தது தெரிந்துள்ளது. இதையடுத்து அந்த தாயிடம் விசாரித்த போலீஸ் மேற்கண்ட திடுக்கிடும் தகவலைக் கூறியுள்ளார்.
இதனால், அந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், குழந்தையின் தாயை காவல்துறை அதிரடியாகக் கைதும் செய்துள்ளனர்.