அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நெற்செய்கைக்கு நீர் வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாததன் காரணமாக விவசாயி ஒருவர் வாடிக் கருகிய நெற்பயிருக்கு தீ வைத்துள்ளார்.
சுமார் இருபது நாட்களுக்கு முன்னர் நெற்செய்கைக்கு நீர் கோரப்பட்டதாகவும், ஆனால் உரிய நேரத்தில் எடுக்கப்படாத தீர்மானங்களினால் நெற்செய்கைக்கு நீர் வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வயலில் விவசாய அமைச்சரின் உருவ பொம்மையும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.