துருக்கியின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
23 பேர் படுகாயம்
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், இதனால் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால், வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.