முல்லைத்தீவு - புலிபாய்ந்தகல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பாரிய சிங்கள குடியேற்றம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பௌத்த பிக்குகளுடன் வருகை தந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குறித்த பகுதியை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
அங்கு சட்டவிரோதமான முறையில் சிங்கள கடற்தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.