மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ள காலநிலை மாற்றம்! பல குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை

tubetamil
0

 கபிதிகொல்லேவ மற்றும் ஹொரோவ்பதான பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீசிய பலத்த காற்றினால் 105 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

105 வீடுகள் சேதம்

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்த கடும் வறட்சியின் பின்னர் நேற்று பிற்பகல் வாஹல்கட பிரதேசத்தில் பெய்த மழையுடன் வீசிய காற்றினால் வீடுகள் சேதமடைந்துள்ளன.

மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ள காலநிலை மாற்றம்! பல குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை | 105 Houses Were Damaged Due To Strong Winds

ஹொரோவ்பதான பிரதேச செயலகத்திற்குட்பட்ட வஹல்கட டி-1, டி-2 மற்றும் கபிதிகொல்லேவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட டி-4, போகஸ் சந்தி, டி-5, டி-7 ஆகிய கிராமத்தில் உள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக குறித்த105 வீடுகளில் வசித்த மக்கள் தற்போது தங்குமிட வசதிகளின்றி,தமது உடைமைகள் அழிந்து பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top