வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோதே நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்தோடு உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை தொடர்பான தீர்ப்பை வழங்கும் போதே கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.