வரலாறுகளை சரிவர விளங்கிக் கொள்ளாத சாணக்கியன்: சாடுகிறார் டக்ளஸ்

tubetamil
0

 நான் தமிழ் மக்களின் பிரச்சனைகளை அறிந்து அரசியலுக்கு வந்தேன் ஆனால் சாணக்கியன் போன்ற சில தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எனது அரசியல் வாழ்க்கை 30 வருடங்களை கடக்கின்ற நிலையில் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் இன்றும் அரசியலில் செய்யப்பட்டிருக்கிறேன்.

மௌனமாக இருந்த சாணக்கியன்

வரலாறுகளை சரிவர விளங்கிக் கொள்ளாத சாணக்கியன்: சாடுகிறார் டக்ளஸ் | Douglas Blames Chanakyan S Politics

தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றத்தில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எனது அமைச்சு சார்ந்து பிரச்சினைகளை தீர்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

நான் எழுந்து என்ன பிரச்சினையை தீர்க்கவில்லை கூறுங்கள் பார்ப்போம் என கூறிய போது அவர் மௌனமாக இருந்தார். என்னிடம் நான் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வரும்போது பிரச்சினைகளை கூறுங்கள் தீர்வு காண்போம் எனத் தெரிவித்திருந்தேன்.

சாணக்கியன் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற சிலர் மக்கள் அனுபவித்த துன்பங்கள் வேதனைகளை அறிந்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தற்போது மக்கள் பிரச்சினையை தீர்க்கப் போகிறோம் எனக் கூறி பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top