வட மாகாண விளையாட்டு போட்டிகள்: மைதானங்கள் தொடர்பில் மாணவர்கள் குற்றச்சாட்டு.......

tubetamil
0

 வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வரும் பருத்தித்துறை பகுதியில் உள்ள தனியார் மைதானங்களில் அடிப்படை வசதி இன்றி காணப்படுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

வடமாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட போட்டிகள் நேற்றைய தினம் (07.08.2023) பருத்தித்துறை பகுதியில் உள்ள நான்கு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் சில தனியார் மைதானங்கள் அடிப்படை வசதிகளின்றி காணப்படுவதாக விளையாட்டுக்களில் கலந்து கொண்ட மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.



அடிப்படை வசதிகள்

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமாகாண ரீதியிலான பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண கால்பந்தாட்டம் உட்பட சில விளையாட்டுப் போட்டிகள் பருத்தித்துறைப் பகுதியிலுள்ள தனியார் விளையாட்டு மைதானங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதில் பங்கு கொள்வதற்காக வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இருந்து பாடசாலை மாணவ, மாணவிகள் சென்றுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top