யாழில் நாயுடன் மோதியதில் இளைஞனுக்கு நேர்ந்த கதி....

tubetamil
0

 நாயுடன் மோதி விபத்துக்குள்ளாகி, படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றைய தினம் (10.08.2023) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் - அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த 21 வயதான தங்கராசா துஷ்யந்தன் என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி



குறித்த இளைஞன், நவாலி - வழுக்கையாறு வழியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை, திடீரென நாய் ஒன்று குறுக்கே பாய்ந்ததால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞன், அம்பியூலன்ஸ் வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குச் சிகிச்சை பெற்று வருகின்றார்..

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top