வெலிக்கடை பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரைிழந்த ஆர்.ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் மேலும் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 2 சார்ஜன்ட்களும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு பதுளை- நாவின்ன பகுதியைச் சேர்ந்த ஆர்.ராஜகுமாரி என்ற பெண் கொழும்பு கொட்டா வீதியிலுள்ள வீடொன்றில் பணிபுரிந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த மே மாதம் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.