திருமண நிகழ்வில் ஏற்றபட்ட சம்பவம் - 100 பேர் பலி

keerthi
0

 



ஈராக்கின் வடக்கு பகுதியில், திருமண நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட தீ பரவலில் 100 பேர் வரை உயிரிழந்ததுடன் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். 

 

அத்தோடு பாதிக்கப்பட்டவர்களில் மணமகனும், மணமகளும் அடங்குவதாக அந்த நாட்டு ஊடகத் தகவர்கள் தெரிவிக்கின்றன. 

 

ஈராக்கின் வடக்கு நினிவே மாகாணத்தில் உள்ள அல்-ஹம்தானியா மாவட்டத்தில் நேற்று மாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. 

 

தீ பரவலுக்கான காரணம் இது வரையில் கண்டறியப்படாத நிலையில் கேளிக்கை பட்டாசுகளின் ஊடாக தீப்பற்றியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top