நண்பர்களுடன் நீராடச் சென்ற 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி..!

keerthi
0

 



கம்புருபிட்டிய, கிராம்ப ஆரா ஓயாவில் நேற்று 13 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


மேலும்கிராம்ப ஆரா ஓயா சபுகொட பிரதேசத்தில் குழுவொன்று குளித்துக் கொண்டிருந்த போது, ​​குறித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


பாடசாலையில் ஹொக்கி பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது ​​குறித்த சிறுமி மேலும் ஒன்பது நண்பர்களுடன் நீராடச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்த மாணவி கம்புருபிட்டிய, உல்வல பிரதேசத்தைச் சேர்ந்தவர்.அத்தோடு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top