சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பு – யாழில் கடற்படையின் நடவடிக்கை

keerthi
0

 



யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த மூவர் கடற்படையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.



கைது செய்யப்பட்ட மூவரும் மன்னாரை சேர்ந்தவர்கள் என்றும் மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்கள் உடமைகளோடு கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை கூறியுள்ளது.


அத்தோடு அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இரவு நேரத்தில் பல படகுகள் சட்ட விரோதமாக கடலட்டை பிடிப்பதாக கடற்படையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இவ்வாறுஇருக்கையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் பல படகுகள் தடைசெய்யப்பட்ட  கடலட்டை தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top