சற்றுமுன் வெளியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

keerthi
0

 



கா.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்சற்றுமுன் வெளியாகி உள்ளது.2022ஆம் கா.பொ.த  உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடுவதற்கான இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெறுபேறுகளை பார்வையிடுவதற்கான பக்கத்தின் G.C.E. (A/L) EXAMINATION - 2022/2023 க்கான பகுதி Enable செய்யப்பட்டுள்ள நிலையில் சுட்டெண் பகுதியில் உள்ளீட்டை செலுத்தினால் தடங்களுக்கு மன்னிக்கவும், மீண்டுமொருமுறை முயற்சிக்கவும் என்ற தகவல் காட்டுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறுஇருக்கையில்  பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற பக்கத்தின் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.

2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றிருந்தது.

அத்தோடு இதில் 278,196 பாடசாலை மாணவர்களும் 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதனால், விடைத்தாள் திருத்தும் செயற்பாடு பின்னடைவை சந்தித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top