மாணவர்களுக்கு ஆபாச காணொளி காண்பித்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி..!

keerthi
0

 



இரத்தினபுரி - ஓபநாயக்க பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர்  அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு ஓபநாயக்க காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் தெயியந்தர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நபரை இன்று நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஓபநாயக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top