அந்த பிரபல இயக்குநர் எனது உடையை முட்டிக்கு மேலே தூக்க சொல்லி.. நடிகை அர்ச்சனா வெளிப்படை!

tubetamil
0

 நடிகை அர்ச்சனா தனக்கு சினிமா துறையில் நடந்த கசப்பான நிகழ்வை பற்றி பேசியுள்ளார்.

நடிகை அர்ச்சனா

தமிழ் சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அர்ச்சனா. பொன்மகள் வந்தால், பொன்னுஞ்சல், வாணி ராணி, அழகி , நீலி , வள்ளி , வேலைக்காரன், அழகு போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

திருவிளையாடல் ஆரம்பம் என்ற படத்த்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இதுவரை திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 'வாலு' திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக நடித்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

அண்மையில் பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு அர்ச்சனா பேட்டியளித்திருந்தார். அப்போது சினிமா துறையில் தனக்கு நடந்த கசப்பான நிகழ்வை பற்றி அர்ச்சனா பேசியுள்ளார்.


அவர் பேசுகையில் "ஒரு பெரிய இயக்குநர், நான் அவரின் பெயர் சொல்ல விரும்பவில்லை. ஒரு ஆடிஷன் போனேன், அதில் எனக்கு ஒரு நர்ஸ் கதாபாத்திரம் என்று சொன்னார்கள். நீங்கள் நர்ஸ் காஸ்டியூம் போடவேண்டும், ஒரு வாரம் ஷூட்டிங் இருக்கும் என்று சொன்னார்கள்.

அப்போது உதவி இயக்குநர்கள் எல்லாம் வெளியே சென்றுவிட்டனர். அப்போது நான் சல்வார் உடை போட்டிருந்தேன். அப்போது அந்த இயக்குநர் என்னிடம் 'உன்னுடைய பேண்டை (Pant) கொஞ்சம் முட்டி வரை தூக்கு" என்று சொன்னார். ஏன் சார்? என்று கேட்டேன். அதற்கு அவர் "ஏ நீ நர்ஸ் காஸ்டியூமில் எப்படி இருப்பன்னு நான் பாக்கணும்ல என்று சொன்னார

நானும் சரி என்று முட்டி வரை தூக்கினேன். அதுவரை தூக்கிய பிறகும், அவர் இன்னும் கொஞ்சம் மேலே தூக்கச் சொன்னார். அப்போதுதான் எனக்கு புரிந்தது, இவர் வேற ஏதோ சொல்கிறார் என்று.

அப்போது அவர் ஒரு பெரிய இயக்குநர், என்னால் அவரிடம் எதிர்த்து பேச முடியாத நிலை. நான் நாளை வந்து காஸ்ட்டியூம் போட்டுக்காட்டுகிறேன் என்று அந்த கம்பெனியில் இருந்து தப்பித்து ஓடிவந்துவிட்டேன்" என்று பேசியுள்ளார்..
   

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top