நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய தகவல்கள் கடந்த வாரம், ‘ஸ்டேட் சீக்ரெட்ஸ்’ அலைவரிசைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதன்படி அடுத்த சில வாரங்களுக்குள் கோட்டாபய ராஜபக்ச எகிப்து செல்ல திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.
ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச இரண்டு தடவைகள் துபாய், மியான்மர் போன்ற நாடுகளுக்கு உல்லாசப் பயணங்களுக்காக சென்றிருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் இம்முறை எகிப்து செல்கிறார்.அதாவது தனது எகிப்து பயணத்தின் போது பெரும் அனுபவமாக கருதப்படும் நைல் நதியை ஒட்டிய ‘நைல் குரூஸ்’ பயணத்தில் கோட்டாபயவம் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.