இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 37 பேர் கைது

keerthi
0

  




அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


அத்தோடு அவர்களிடமிருந்து 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்புகளில் நேற்று பிற்பகல் முதல் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் கைதான 37 இந்திய மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மீனவர்கள் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top