பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

keerthi
0

 






இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும், இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.


எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகும் பருவபெயர்ச்சி மழை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


எனினும் குறித்த பயணிகள் கப்பல் சேவை கடந்த 14ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.


போதிய முன்பதிவு இன்மையால், இந்த கப்பல் சேவையை வாராந்தம் 3 தினங்களுக்கு முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.


எவ்வாறாயினும், பருவ பெயர்ச்சி மழை காரணமாக குறித்த கப்பல் சேவையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக த ஹிந்து நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top