உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரி பங்களாதேஷ் அணி, நியூசிலாந்து அணியை இன்று (13) வெள்ளிக்கிழமை எதிர்கொள்ளவுள்ளது.
சென்னையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
எனினும் இதன்படி பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
உலக் கிண்ண தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றதோடு இன்று தனது மூன்றாவது வெற்றியை எதிர்பார்த்து களமிறங்குகிறது.
அத்தோடு பங்களாதேஷ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியுடனும் ஒரு தோல்வியுடனும் உள்ளது.
இந்நிலையில் இன்று தனது இரண்டாவது வெற்றியை எதிர்பார்த்து நியூசிலாந்துடன் பங்களாதேஷ் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.