இலங்கை திரையுலகின் மூத்த நடிகர் ஜெக்சன் எண்டனி கலைத்துறைக்கும், நாட்டிற்கும் ஆற்றிய சேவை ஈடு இணையற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை திரையுலகின் மூத்த நடிகரான ஜெக்சன் எண்டனி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
மேலும் சிறந்த நடிகர், திரைப்பட இயக்குநர், பாடகர், அறிவிப்பாளர், எழுத்தாளர் மற்றும் ஓவியர் என கலைத்துறைக்கு ஜெக்சன் எண்டனி ஆற்றிய சேவை ஈடு இணையற்றது எனவும், சிங்களக் கலையுலகில் அவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.