யாழில் இளம் குடும்பப்பெண் ஒருவர் தனக்குதானே தீ வைத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யாழ். பருத்தித்துறை பகுதியில் கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக குறித்த பெண் இத்தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்கோவளம் பருத்தித்துறையைச் சேர்ந்த குமரன் கர்னிகா (வயது 29) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.