பிக்பாஸ் 7 கடந்த அக்டோபர் 1ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இந்த சீசன் 2 வீடுகள் இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே வழக்கமாக 6 சீசன்களில் நடக்காத விஷயங்களாக நடந்து வந்தன. இன்று வந்த புரொமோவில் புதுவித டாஸ்க் ஒன்று வந்துள்ளது.
அதாவது இதுவரை ஸ்கோர் செய்யாத போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு அவர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் வீட்டில் நுழையப்போகும் 3 புதிய வைல்ட் கார்ட்டு போட்டியாளர்களுக்கு வழிவிட்டு வெளியே செல்ல வேண்டுமாம்.
மேலும் இந்த புதிய புரொமோவை பார்த்த ரசிகர்கள் அட என்ன டா இது நிறைய புது புது விஷயங்கள் இந்த சீசனில் உள்ளது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேறியதும் அவரை மீண்டும் வீட்டிற்குள் அனுப்புங்கள் என ரசிகர்கள் புலம்பி வந்தார்கள். ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை, கடந்த வார நிகழ்ச்சியிலாவது பிரதீப் வருவார் என்று பார்த்தால் அது நடக்கவில்லை.
இவ்வாறுஇருக்கையில் பிரதீப் தனது சமூக வலைதளத்தில், ”இப்போ ஒரு நான்கைந்து தயாரிப்பாளர்கள் என்னை நம்பி கதை கேட்கிறார்கள், நான் கண்டிப்பாக கதையுடன் களத்தில் இறங்க உள்ளேன். நான்கு ஃபாரின் படம் பார்த்து, திருடி, ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, படத்தோட வருவேன். என்னை ஆள விடுங்க. நீங்களாச்சு, பிக்பாஸ் ஆச்சு, போயிட்டு வர்றேன், நல்லா இருங்க’ என்று பதிவு செய்துள்ளார்.
அத்தோடு அவர் விரைவில் நல்ல படத்தோடு சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.