2-வது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

keerthi
0

 



தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் நிலையில் கடலோர பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதன்படி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. அத்தோடு கடலில் அடுக்கடுக்கான அலைகள் எழுந்து சீற்றமாக காணப்படுகிறது.


இதனால் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.


இதனால் 1500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


அத்தோடு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top