இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனையடுத்து,தமிழக கடற்றொழிலாளர்களை மயிலிட்டி துறைமுக அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் குறித்த தமிழக கடற்றொழிலாளர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.