யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணி பகுதியில் 35 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா 14 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கஞ்சா 16 பொதிகளில் பொதியிடப்பட்டு வெற்றிலைக்கேணி கடற்கரையில் கரையொதுங்கியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.