சர்வதேச ரீதியில் சாதித்துக்காட்டிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த 6 வயது சிறுவன்..!!

tubetamil
0

 மலேசியாவில் இடம்பெற்ற 36 நாடுகள் பங்குபற்றிய மனக் கணிதப் போட்டியில் ஆறு வயதிற்கு உட்பட்ட பிரிவில் யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவனும் திருநெல்வேலி Ucmas மாணவனுமான சுதர்சன் அருணன் A1 பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2 ஆம் இடத்தை பெற்றார்.


இம் மாணவன் இலங்கையில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற நிலையில் மலேசியா கோலாலம்பூரில் இடம்பெற உள்ள சர்வதேச மனக் கணிதப் போட்டிக்கு செல்லத் தெரிவானார்.

இன் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சர்வதேசப் போட்டியில் 36 நாடுகளில் இருந்து பலர் போட்டயில் பங்குபற்றிய நிலையில் அருணன் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்தான்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top