பதுளை - பண்டாரவளை வீதி, நேற்று மாலை முதல் கனரக வாகனங்களுக்காக மாத்திரம் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
06 ஆம் கட்டைப் பகுதியில் நிலவும் மண்சரிவு அபாயத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பதுளை மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பதுளை மாவட்டத்தின் எல்ல மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (a)