குருணாகல் – வெல்லவ பிரதேசத்தில் பணம் சம்பாதிக்கும்நோக்கத்திற்காக தனது 14 வயது மகளின் நிர்வாண புகைப்படங்களை கேட்டு மனைவியை தா க்கிய கணவரை கொ லை செய்த மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணாவார்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வைத்தியசாலையில் பணியாளராக சேவையாற்றிய 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இவர் தனது மகளின் நி ர்வாண புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என பல முறை தனது மனைவியுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் நேற்று (03) இவர் தனது மனைவியிடம் மகளின் நி ர்வாண புகைப்படங்களை எடுக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இருவருக்குமிடையிலான வாக்குவாதம் எல்லை மீறியதால் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து இவர் தனது மனைவி மற்றும் மகனை வீட்டிற்கு வெளியே தள்ளி, தனது மகளை நி ர்வாணமாக புகைப்படங்களை எடுக்க முற்பட்ட போது குளியலறையில் இருந்த கணவரின் கண்களில் மிளகாய் பொடியை தூவிய மனைவி அவரை கத்தியால் குத்தி கொ லை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் சமூக ஊடகங்களில் பெண்களின் நி ர்வாண புகைப்படங்களை பதிவு செய்து பணம் சம்பாதித்து வந்தமை தெரியவந்துள்ளது.
அத்தோடு இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.