இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

keerthi
0

 



இராமநாதபுரம் மாவட்ட மண்டபத்தை அண்மித்த வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

  மேலும் இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட படகு, நேற்று (12) இந்திய கடலோர காவல் படையினரால் நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்டு மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்திய கடலோர காவல் படை வீரர்களை கண்டதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பித்ததால் படகுடன் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்து இந்திய காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அத்தோடு     பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் போதை மாத்திரைகளாக இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் இதன் மொத்த இந்திய மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top