காணி அபகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாணம் - பொன்னாலை பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொன்னாலை சந்திக்கருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு அராலி முதல் பொன்னாலை வரையிலான காணிகளை ஆக்கிரமிப்புச் செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.