குறித்த சம்பவத்தில் நேற்றிரவு 07மணியளவில் தொடடத்தில் நுழைந்த யானைகள் அதிகாலை 2.00மணி வரை வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது எனவும், அரை ஏக்கர் வாழைத்திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட 480 பெறுமதி மிக்க வாழைகுட்டிகள் வழங்கப்பட்டு அதில் 225வாழைகளை பயன் பெரும் நேரத்தில் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சுமார் 04இலட்சம் ரூபாய் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சென்ற வருடமும் இதே போன்ற அழிவை சந்தித்துள்ளதாகவும் தோட்ட உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள யானை வேலி ஒன்றை அமைத்து தருமாறும் கேட்டுள்ளார்.