தனக்குத் தெரியாது என்கிறார் மஹிந்த..!!

tubetamil
0

 அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி


மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் கட்சியின் பலத்தை காட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெரும்பான்மையான மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெமுனவுடன்  திரண்டுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை விட்டு மக்கள் நகரவில்லை என்பதை கட்சி மாநாடு நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார். துளிர்விடும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர் என்றார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி தனக்கு இல்லை என்றும், கட்சி யாராக இருந்தாலும் வெற்றிபெற ராஜபக்‌ஷக்கள் பாடுபடுவார்கள் என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top