வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்..!!

tubetamil
0

 வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று




காலை 10.30 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது 
கிளிநொச்சி அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, எமது உறவுகள், காணி, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தாத ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் மேற்கொள்வதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுகிறோம்.

எமக்கு நீதி தராத தரப்புடன் நல்லிணக்க பேச்சு மேற்கொள்ள முடியாது. அண்மையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் சில நாட்களில் போராட்டத்தில் கலந்துகொண்ட தாயார் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், ஒரு தாயார் இருக்கும் வரை எமது தொடர் போராட்டம் தொடரும் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top