யாழ்ப்பாணம் கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் விதமாக அளவீடுகள் செய்வதற்கு இன்றையதினம்(15) நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் வருகை தந்த நிலையில் குறித்த காணி அளவீட்டு செயற்பாட்டுக்கு மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் .
\\
மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது,
வலி வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 கெக்டேயர்( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும்
ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
\\
\
இந்நிலையில் இந்த அளவீட்டு பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதனால் நில அளவை திணைக்களருக்கு பொலிஸார் "அரச சேவைக்கு இடையூறு விளைவிப்பதாக நீங்கள் தெரிவித்தால் அளவீடு செய்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம்" என தெரிவித்தனர்
இச் சம்பவம் குறித்து அப்பகுதியில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.