குதிரைக்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் இருந்தால் கூட்டுறவு முன்னேற்றம் அடையாது யாழ் அரசாங்க அதிபர்
அ.சிவபாலசுந்தரன் தெரிவிப்பு
கூட்டுறவுத்துறையினை முழுமையாக பயன்படுத்தாமல் இருக்கின்றோமோ என்ற நிலை உருவாகியிருக்கின்றது
கடந்த 10வருட காலப்பகுதியில் கூட்டுறவுத்துறை எதிர்பார்த்த நிலையினை இன்னும் இல்லை? அதற்கு இன்னும் தூரம் இருக்கின்றது..இதற்குக்காரணமாக மக்கள் மத்தியில் முறையாக விழிப்புணர்வு செயற்படுத்தவில்லை யாழ் அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்...
ஒவ்வொரு பிரதேசசெயலாளர்கள் பிரிவிலும் 100 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்கள்?அவர்களுக்கு எத்தனை நபர்களுக்கு கூட்டுறவு சம்பந்தமான அறிவு இருக்கின்றது.படித்து யிருக்கின்றார்கள் அதன்படி சரியான முறையில் கூட்டுறவு பற்றி சரியாக விளக்கம் போதாது உள்ளது
பிரதேச செயலகஅபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வுக்கருத்தரங்குகளை மாவட்ட மட்டத்தில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்...கூட்டுறவுத்துறை சரியாக விரிவுபடுத்தப்படவில்லை
ஒரு துறையினை ஆரம்பிக்கின்றபோது முதலில் அரச உதவிகள்,தனியார் அரசசார்பற்ற உதவிகள் கிடைத்தால் அதில் இருந்துகொண்டே வளர்ந்துகொண்டு போகவேண்டும்...
அதில் பல காரணங்கள் இருக்கின்றது 2009 ஆம் ஆண்டில் இருந்த சூழ் நிலைவேறு அதற்கு பிற்பாடு உள்ள சூழல்வேறு அதற்கான அரசியல்தலையீடுகள்,அதனால் தான் கூட்டுறவினை உறுஞ்சி அழித்துவிட்டுபோய்விட்டுபோய்விட்டாங்க..
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் கூட்டுறவுபற்றி தூர நோக்கு சிந்தனை இருக்கவேண்டும்.அதில் இருந்து ஒவ்வொரு கூட்டுறவுசங்கள் ஊடாக என்ன தூரநோக்கில் செயற்றிட்டங்களை முன்னெடுக்கயுள்ளோம்..அதற்கான திட்டங்களும் இல்லை?
எதிர்பார்க்கின்றோம் கிளிநொச்சி,முல்லைத்தீவு, வவுனியா,மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்களுடன் கதைத்து அங்குள்ள 30,40 ஏக்கர் அரசகாணிகளைப்பெற்று ஏன் பாற்பண்ணை உற்பத்திவலயமாக 2024 ஆம் ஆண்டில் உருவாக்க முடியும்..
தென்பகுதியில் இருந்து வந்து முதலீடு செய்கின்றபோது ஏன் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில் கூட்டுறவாளர்கள் ஒருகாணியினை பெற்று ஒரு பண்ணையினை உருவாக்ககூடாது?அதனைப்பற்றி சித்திக்ககூடாது.குதிரைக்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் இருந்தால் எதனையும் செயற்படுத்தமுடியாது அதேவேளை கூட்டுறவு முன்னேற்றம் அடையாது
அரசகாணியினை பெற்று கூட்டுறவினை ஊக்குவிக்க முழுமையான ஆதரவினை தர வடமாகாண ஆளுநர் இருக்கின்றார்..என்றார்