போலி இராணுவ அடையாள அட்டை மற்றும் போலி துப்பாக்கியுடன் கொள்ளை சம்பவமொன்றுக்கு தயாரான நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பத்தளை - சேதவத்தை வீதியில் புதிய களனி பாலத்திற்கு அருகில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்துக்கு இடமான இரண்டு உந்துருளிகளை சோதனையிட்டுள்ளனர்.
அதன்போது சந்தேகநபர் ஒருவரிடமிருந்து போலி துப்பாக்கி மற்றும் அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்து போலி இராணுவ அடையாள அட்டை என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணையில் குறித்த சந்தேகநபர்கள் கொள்ளையிடும் நோக்கில் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.