பொரளை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்கள் இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் பொலிஸ் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவலைகள் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் பொரளை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்கள் இருவர் இரவு நேர ரோந்து பணியில் இருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் சந்தேகநபர் அனுராதபுரம் விஜயபுர பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் எனவும்
அவரிடம் இருந்து கூரான ஆயுதமும் தலைக்கவசமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல் கட்டிட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.