தொட்டாலையில் உள்ள ‘மெத்சண்ட செவன’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து
ஐஸ் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பேலியகொட குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர் சுமார் 15 இலட்சம் பெறுமதியான 100 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாகவும்
கிம்புலாலே குணாவின் சகோதரர் ஷிவா தலைமையிலான 56 வயதுடைய காந்தி என்ற பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் சந்தேகநபர் நேற்று (14) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.