பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து வரும் 7வது சீசன் முடிந்த பின்பு கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 2017ம் ஆண்டிலிருந்து தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சி தற்போது 7வது சீசனை வெற்றிகரமாக அடைந்துள்ளது.\
முதல் நிகழ்ச்சியிலிருந்து தற்போது வரை மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கு காரணம் இந்நிகழ்ச்சியின் தொகு்பபாளரான உலகநாயகன் கமல்ஹாசன் தான்.
அதிலும் இந்த சீசனில் தவறு செய்தவர்களை சரியான முறையில் தட்டிக்கேட்டு வருகின்றார். ஆனால் சில தருணங்களில் கடும் விமர்சனத்தையும் பெற்று வருகின்றார். அதிலும் நிக்ஷ்ன், வினுஷா விடயத்தில் எதையும் பேசாமல் இருந்தார்.
நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல்
இந்த நிகழ்ச்சியிலேயே தவறை தட்டிக்கேட்காத நீங்கள் அரசியல் வந்தால் எவ்வாறு தட்டிக்கேட்பீர்கள் என்று கேள்வி கேட்டநிலையில், இவருடைய அரசியல் வாழ்க்கையும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், கமல்ஹாசன் அதிரடியான முடிவு ஒன்றினை எடுத்துள்ளாராம்.
கமல்ஹாசன் வெளியேறிவிட்டால் அதன்பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று அனைவரது மனதிற்கும் வருவது சிம்பு தான், ஆதலால் அடுத்த தொகுப்பாளர் சிம்புவா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.