கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகரை பிணையில் விடுவிக்க திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
05 இலட்சம் ரூபாய் பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபரான கதிர்காமம் ஆலய பிரதான பூசகரை ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
கதிர்காமம் ஆலயத்தின் தங்கத் தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.