உந்துருளியில் தம்மை அழைத்துச் செல்ல மறுத்த காவல்துறை உத்தியோகத்தரை தடியால் தாக்கியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் - ரஸ்நாயக்க காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தரே நேற்று(11) இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
முன்னதாக குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கடமை முடிந்து உந்துருளியில் வீடு திரும்பிய போது, தம்மையும் அழைத்துச் செல்லும்படி குறித்த நபர் கூறியுள்ளார்.
எனினும் காவல்துறை அதிகாரி அவரின் கோரிக்கையை நிராகரித்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை உத்தியோகத்தர் நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.