குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில்
குற்றச் செயல்களை விசாரிப்பதற்கான நடமாடும் ஆய்வுகூடம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு பதில் பொலிஸ் மா அதிபர் திரு.தேஸ்பந்து தென்னகோன் தலைமையில் இன்று (15) இடம்பெற்றது.
ஆசியாவில் இவ்வாறான நடமாடும் நோயறிதல் ஆய்வு கூடம் இயங்குவது இதுவே முதல் தடவை என தாம் நம்புவதாகவும் திரு தென்னகோன் மேலும் தெரிவித்திருந்தார்.
மேலும் இலங்கையில் பாரிய குற்றச்செயல்கள் இடம்பெறும் இடங்களுக்கு இந்த வாகனத்தை செலுத்துவதன் மூலம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொழும்பு அலுவலகம் வழங்கும் சேவையை அந்த இடத்தில் மிக விரைவாக மேற்கொள்ள முடியும்
இதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட கொலைகள், கொள்ளைகள், பாரிய குற்றங்கள், பாரிய கணினி குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்
அதேநேரம் , பல வருடங்களாக செயற்படாமல் இருந்த பொலிஸ் மா அதிபர் நிவாரண அறையும் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.