கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 6 நவீன கிரேன்களின் உதவியுடன் கொள்கலன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கிழக்கு முனையத்தின் 80 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
எனினும் இதன் நிர்மாண செலவு 825 மில்லியன் ரூபாவாகும்.
கிழக்கு முனையத்தின் கொள்கலன் இயக்க திறன் வருடாந்தம் 20 இலட்சம் என தெரிவித்துள்ளார்.